சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து – சென்னை ரயில்வே அறிவிப்பு!

0
சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து - சென்னை ரயில்வே அறிவிப்பு!
சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து - சென்னை ரயில்வே அறிவிப்பு!
சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து – சென்னை ரயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை நகரின் மின்சார ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை முதல்வர் பிறப்பித்தார். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் சேவை மட்டும் தொடர்ந்து வழங்கப்பட்டது. பொது போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்களின் நடமாட்டத்தை குறைக்கவும், மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்வதை தவிர்க்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் இன்று 1551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – சுகாதாரத்துறை அறிவிப்பு!

ஜூன் 25ம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 29ம் தேதியான நாளை சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் சில மின்சார ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 மணி, 1.40 மணி, 2.30 மணி, கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.20 மணி, 11.30 மணி, மதியம் 12.10 மணி, 12.30 மணி, 1.50 மணி, செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15 மணி, 11 மணி, மதியம் 12.25 மணி, மற்றும் காஞ்சிபுரம்-கடற்கரை இடையே காலை 8.45 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் எழும்பூர்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!