பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எப்போது? தொடர்ந்து எழும் கேள்வி!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் குறித்து எந்த அறிகுறிகளும் வெளியிடவில்லை. இது குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தீபாவளி போனஸ்:
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் போனஸ் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. அடுத்ததாக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான மிகை ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெரிய வெங்காயத்தின் விலை அதிரடி உயர்வு – கிலோ ரூ. 54-க்கு விற்பனை!
அதில் பொதுத்துறை ஊழியர்களான கூட்டுறவு பஞ்சாலை, சர்க்கரை ஆலை, மின்வாரியம் , ஆவின், டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை முன்பணம், மிகை ஊதியம் தொடர்பான எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மிகை ஊதியத்தின் அளவை 25% உயர்த்தி அரசு அறிவிக்க வேண்டும். தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் விரைந்து போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.