Tokyo Paralympics 2020: வெண்கலப் பதக்கத்தை இழந்த வட்டு எறிதல் வீரர் வினோத் குமார்!
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் வட்டு எறிதல் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் வினோத் குமார் பெற்ற வெண்கலப் பதக்கத்தை போட்டி நடத்தும் தொழில்நுட்பக் குழு திரும்ப பெற்றுள்ளது.
பதக்கம் இழப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த சுமார் 4.500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர்களும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்று வருகின்றனர். இதில் 7 வீரர்களுக்கு ஒரு தங்கம் உட்பட மற்ற பதக்கங்களும் கிடைத்துள்ளது.
ஆப்கனில் இருந்து நாளை முழுமையாக வெளியேறும் அமெரிக்க படை – காலஅவகாசம் நிறைவு!
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வினோத் குமார் போட்டியிட்டார். இதில் F 52 பிரிவில் 19.91 மீ தூரம் வரை எறிந்து மூன்றாவது இடத்தை பெற்ற இவர் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து 2 ஆவது முயற்சியில் 18.32 மீட்டர், 3 ஆவது முயற்சியில் 17.80 மீட்டர், 4 ஆவது முயற்சியில் 19.12 மீட்டர் மற்றும் 5 ஆவது முயற்சியில் 19.91 மீட்டர் என்ற தூரத்திற்கு வட்டு எறிந்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் 14 வயதான வினோத் குமார் ஆசிய சாதனையை அடைந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் முடிவு மறு பரிசீலனை செய்யப்பட்டதை அடுத்து அவரது வெண்கல பதக்கம் திரும்ப பெறப்பட்டது. அந்த வகையில் F 52 பிரிவில் பங்கேற்ற வினோத் குமார் அதற்கு தகுதி பெறாத காரணத்தால் தொழில்நுட்ப குழுவினர் எடுத்த முடிவின் கீழ் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.