தமிழகத்தில் நாளை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு – முக்கிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளினால் சீரற்ற நிலையில் இருக்கும் பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அரசு உத்தரவு:
டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி 2 நாட்கள் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏரிகளில் நீர் நிரம்பி அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் பெரும்பாலும் வெள்ள நீரில் சூழ்ந்து மக்கள் தவிக்கும் நிலை இருந்தது. எனவே பாதுகாப்பு காரணம் கருதி சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு – அரசிடம் வலியுறுத்தல்!
இந்நிலையில் நாளை டிசம்பர் 9ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் புயலினால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பள்ளிகளை திங்கட்கிழமை திறப்பதற்கு ஏதுவாக சீரமைக்கும் முன்னேற்பாடு பணிகளை செய்வதற்கு ஆசிரியர்கள் மட்டும் நாளை பள்ளிக்கு வர வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை சென்னையின் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.