நெருங்கும் மிக்ஜாம் புயல் – நீடிக்கும் கனமழை… தமிழக அரசின் முக்கிய வேண்டுகோள்!

0
நெருங்கும் மிக்ஜாம் புயல் - நீடிக்கும் கனமழை... தமிழக அரசின் முக்கிய வேண்டுகோள்!
நெருங்கும் மிக்ஜாம் புயல் - நீடிக்கும் கனமழை... தமிழக அரசின் முக்கிய வேண்டுகோள்!
நெருங்கும் மிக்ஜாம் புயல் – நீடிக்கும் கனமழை… தமிழக அரசின் முக்கிய வேண்டுகோள்!

புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இரவு முழுவதும் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நீடிக்கும் மழை:

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு மிக அருகில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளதுpu. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். பலத்த காற்றுடன் மழை கொட்டு தீர்த்து வருவதால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது.

ஜன.1லிருந்து ரேஷன் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் – உடனே இதை பண்ணுங்க!!

இந்த புயல் தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் நகர்ந்து கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளையும் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை சென்னையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு முழுவதும் மழை நீடிக்கும் என்பதால் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!