தமிழகத்தில் 3 மாதங்கள் கடன்தொகை வழங்க அவகாசம் – மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை!

0
தமிழகத்தில் 3 மாதங்கள் கடன்தொகை வழங்க அவகாசம் - மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை!
தமிழகத்தில் 3 மாதங்கள் கடன்தொகை வழங்க அவகாசம் - மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை!
தமிழகத்தில் 3 மாதங்கள் கடன்தொகை வழங்க அவகாசம் – மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கடன் தொகைகளை செலுத்துவதற்கு மத்திய அரசு கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

கால அவகாசம்:

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜனவரி மாத தொடக்கத்தில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை தொடர முடியாமலும் தங்கள் உடைமைகளை இழந்தும் தவித்து வருகின்றனர். மேலும் சிறு, குறு வணிகர்கள். நடுத்தர நிறுவனங்கள் பலவற்றில் உள்ள இயந்திரங்களும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் வணிகர்கள் தற்போது வரையிலும் தங்கள் தொழிலை தொடங்க முடியாமல் உள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

வணிக நிறுவனங்களுக்கான கடன்களைப் பெற்றுள்ள மக்கள் பெரும்பாலும் கடன் தொகைகளை செலுத்த முடியாமல் உள்ளனர்/ எனவே டிசம்பர் 1, 2023 முதல் பிப்ரவரி 29, 2024 ஆகிய மூன்று மாதங்கள் வரை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள கடன்களுக்கு தவணை செலுத்துவதிலிருந்து இந்த 4 மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும் விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பிரச்சனையின் அவசர நிலை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இதற்கு தீர்வளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!