ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8 2019
- இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி மற்றும் குஃப்ரி ஆகிய இடங்கள் மைனஸ் டிகிரி குளிரில் நடுங்கின.
- தனியார் தொலைக்காட்சி சேனல்களுடன் ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை பகிர்வதை ரத்தோர் தொடங்கி வைத்தார்.
- தேர்தல் ஆணையம் திருவாரூர் சட்டசபை தேர்தலை ஒத்திவைத்தது.
- பிரயாக்ராஜ் முதல் கத்ரா வரையிலான நேரடி பேருந்து சேவை தொடக்கம்.
- குவாத்தமாலா ஐ.நா. ஆதரவு ஊழல் எதிர்ப்பு ஆணையத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறியுள்ளது.
- உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் பிப்ரவரி 1 ம் தேதி பதவி விலக முடிவு.
- ஈரானின் சபாஹார் துறைமுகத்தில் இந்தியா வேலைகளை மேற்கொண்டு வருகிறது.
- ஆர்பிஐ டிஜிட்டல் பேமண்ட்களை அதிகரிக்க குழுவை உருவாக்கியது.
- 2014ம் ஆண்டு முதல் சணலின் பல்வேறு உப பொருட்களின் ஏற்றுமதி 24 சதவீதம் உயர்ந்துள்ளது என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
- ரைசினா உரையாடலின் நான்காவது பதிப்பு புது டெல்லியில் தொடங்கும். தீம் “A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes”.
- கீதா கோபிநாத் – சர்வதேச நாணய நிதியம், தலைமை பொருளாதார நிபுணர்.
- டி.என்.ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்ட மசோதா லோக் சபாவில் நிறைவேற்றம்.
- பொதுப்பிரிவில் உள்ள EWS க்கு 10% ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியா டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி உறுப்பினர்களுக்கு பி.சி.சி.ஐ. பரிசு அறிவிப்பு.
- மகாராஷ்டிரா, புனேயில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாவது பதிப்பு தொடங்க உள்ளது.