கடலூர் ஊராட்சி அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
கடலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.12.2020 க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | கடலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் |
பணியின் பெயர் | கிராம ஊராட்சி செயலர் |
பணியிடங்கள் | 18 |
கடைசி தேதி | 03.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கடலூர் ஊராட்சி அலுவலக பணியிட விவரம்:
கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம ஊராட்சி செயலர் வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஊராட்சி செயலர் பதவிக்கான கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை:
கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்புகள் பின்னர் தெரிவிக்கபப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://cuddalore.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 03.12.2020 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Kiramam urachi mandra seyalar velai