இந்தியாவில் ஒரே நாளில் 2,994 ஆக மாறிய கொரோனா பாதிப்பு – மத்திய அமைச்சகம் தகவல்!
நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
2020ம் ஆண்டு முதல் இந்திய நாட்டை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் மிகவும் குறைந்து கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. மிகவும் அரிதாக அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே தொற்று பதிவாகி வந்தது. இந்நிலையில், சில வாரங்களாக தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இஸ்லாமியர்கள் பணி நேரத்திற்கு முன்னதாக வீடு திரும்பலாம் – மாநில அரசின் சூப்பரான அறிவிப்பு!
முதலில், நூறுகளில் பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கையானது ஆயிரத்தை தாண்டியதும் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக 3,000க்கும் அதிகமாக பதிவாகி வந்த கொரோனா தொற்றானது, கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 2,994 பேருக்கு பரவியுள்ளது. இதனால் நாடு முழுவதும் தொற்று பாதித்து உள்ளவர்களின் எண்ணிக்கை 16,354 ஆகவும் உயர்ந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரே நாளில் 9 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்றும், 1840 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download