மே இறுதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று தினசரி அதிகரித்து வரும் காரணத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் தற்போது ஊரடங்கினை மே இறுதி வரை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஊரடங்கு உத்தரவு பல்வேறு மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு நாளைக்கு 4000க்கும் அதிகமானோர் இந்த நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் 24 மணி நேரம் முழு ஊரடங்கு? முதல்வர் விளக்கம்!
இதனால் அந்த மாநிலத்தில் பாதிப்பு அதிகமுள்ள போபாலில் வரும் மே மாதத்தின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் கொரோனா 2ம் அலையின் காரணமாக மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கூடுதலாக, இந்த நோய் தாக்கத்தினால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வருடம் மரணம் அடைந்துள்ளனர் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை அம்மாநில அரசு மறுத்துள்ளது. இதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு அம்மாநில உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.