Work From Home ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – வேலை பறிபோகும் அபாயம் வந்தாச்சு!!

0
Work From Home ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் - வேலை பறிபோகும் அபாயம் வந்தாச்சு!!

IT மற்றும் சாப்ட்வேர் சேவைத்துறைகளில் உலகின் பிரபலமான நிறுவனம் COGNIZANT. அதன் ஊழியர்களில் பெருபான்மையினர் இந்தியாவில் தான் உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுதும் கொரோனாவால் தாக்கப்பட்ட போது IT நிறுவனங்களும் அனைத்தும் ஊழியர்களுக்கு Work From Home சலுகையை வழங்கியது. அதன் பின்னர் தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்தது.

ஆனால், ஊழியர்கள் யாரும் அலுவலகம் வர விரும்பவில்லை. இந்த நிலை தான் தற்போது COGNIZANT நிறுவனத்தில் நீடித்து வருகிறது. தன் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து COGNIZANT பலமுறை மெயில் அனுப்பியும் அநேகமானோர் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதையே விரும்புகின்றனர். இதனால் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும் மீதமுள்ள நாட்கள் வீட்டிலும் வேலை பார்க்குமாறு COGNIZANT அறிவுறுத்தியது. அப்போதும் பணியாளர்கள் மசிவதாக இல்லை.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 – ரொம்ப ஈஸியா கணக்குகள் வருமா??

இப்பொழுது இறுதியாக எச்சரிக்கை மெயில் ஒன்றை COGNIZANT அனுப்பியுள்ளது. அதில், அலுவலகத்திற்கு திரும்பாத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதே நிலை நீடித்தால் ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களும் இந்த எச்சரிக்கை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!