தமிழக போலீசார் கவனத்திற்கு – ‘CLAPP’ என்ற விடுப்பு செயலி அறிமுகம்! முழு விபரம் இதோ!
தமிழக காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் தற்போது பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விடுப்பு செயலி:
இந்தியாவில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் முக்கியமான மூன்று துறைகளில் ஒன்றாக காவல்துறை இயங்கி வருகிறது. இத்தகைய காவல்துறை நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சட்ட ஒழுங்கை காப்பாற்றும் காவலர்களுக்கு விடுமுறை கிடைப்பது என்பது சற்று முடியாத காரியம் தான். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தின் காவல் துறையின் புதிய டிஜிபி ஆக சைலேந்திர பாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அவ்வாறு சைலேந்திர பாபு அவர்கள் பதவியேற்ற பிறகு தமிழக காவலர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் பெண் காவலர்களுக்கும் சில சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து இன்னும் சில மாநிலங்களில் காவலர்களுக்கு பணிச்சுமை குறைக்கும் விதமாக சில நவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்? சுகாதார அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் தற்போது தமிழக காவலர்கள் அவர்களது வார விடுப்பு மற்றும் இதர விடுப்பு தர அனுமதி கோரி விண்ணப்பிக்கும் வகையில் மொபைல் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இந்த CLAPP விடுப்பு செயலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் காவலர்கள் இந்த விடுப்பு செயலி மூலம் விடுமுறையை வீட்டிலிருந்தே பெற முடியும். மேலும் இந்த செயலி மூலம் 2ம் நிலை முதல் தலைமைக்காவலர்கள் வரையிலான அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.