அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை – புதிய உத்தரவு!
வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் அளவை குறைக்கும் பொருட்டு சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் பயன்படுத்த தடை:
உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தினை வழங்கும் படியாக ஐபோன் நிறுவனம் தொடர்ந்து பல பல அப்டேட்டுகளை வெளியிட்ட படி இருந்து வருகிறது. இந்நிலையில், சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியை பல நாடுகள் தடை செய்ததின் எதிரொலியாக சீன அரசாங்கம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வார இறுதியில் அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை – விலை பட்டியல் வெளியீடு!
அதாவது, சீனாவில் பலரும் ஐபோனை விரும்பி பயன்படுத்தி வரும் நிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் மீதான மோகத்தை குறைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஐபோன் மற்றும் வெளிநாட்டு முத்திரை உள்ள கருவிகளை சீன அரசு ஊழியர்கள் பணியின்போது பயன்படுத்தக் கூடாது என அரசாங்கம் புதிய உத்தரவினை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புதிய உத்தரவு குறித்து சீனா அதிகாரிகளுடன் கலந்தோசிக்க விரும்பவில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவித்துள்ளார்.