மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2024 முதல் அகவிலைப்படி 4% சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது. மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4% விரைவில் வர இருக்கிறது. இதற்கு அரசு மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டு ஏப்ரல் மாதம் செலுத்தப்பட இருக்கிறது. அதனால், ஜனவரி முதல் மார்ச் வரை அகவிலைப்படி நிலுவைத்தொகையாக வழங்கப்படும். அது மட்டுமில்லாமல், ஏப்ரல் மாத டிஏவும் இதில் சேர்க்கப்படும். புதிய ஊதிய விகிதத்தில், ஊதியக்குழுவின் படி அகவிலைப்படி கணக்கிடப்படும்.
படிப்பை தொடர வசதி இல்லையா? – தமிழக அமைச்சரின் ஆலோசனை!
லெவல்-1 கிரேடு பே-1800, மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000. இந்த ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு காரணமாக, மொத்த டிஏவில் ரூ.774 மாறுபாடு ஏற்பட்டுள்ளது. லெவல்-1 கிரேடு பே-1800, மத்திய ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900. இந்த ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு காரணமாக, மொத்த டிஏவில் ரூ.2276 அதிகரிக்கும்.