தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
வழக்குகள் வாபஸ்:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரை மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்றது. மேலும் இதர கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்தியர்களுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் கண்காணிப்பு பணி – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். மேலும் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீட் தேர்வு ரத்து செய்வதற்கான முன்வடிவு, சிஏஏ.,விற்கு எதிரான மசோதா, 3 முக்கிய வேளாண் சட்டங்கள் ரத்து என தமிழக மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
சட்டசபையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், கடந்த ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தும் தற்போது தமிழக அரசு வாபஸ் பெறும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.