தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து வசதி – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து:
தமிழகத்தில் மாற்றுத் திறனாளர்களுக்கு அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவர்கள் சமூகத்தில் தனக்கான அடையாளத்தை பெறும் நோக்கில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மாற்றுத்திறனாளர்களுக்கு ஏற்ற வாகனங்களை வழங்குகிறது. மேலும் பேருந்துகளில் இலவச பயணத்தை அளிக்கிறது. தற்போது தமிழக முதல்வர் மாற்றுதிறனாளர்களின் உதவியாளர்களும் இலவசமாக அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கும் தேதி – அமைச்சர் முக்கிய ஆலோசனை!
கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இந்த உத்தரவின் பேரில் தமிழக அரசு புதிதாக 4000 பேருந்துகளை வாங்க திட்டமிட்டது. இதில் 10% பேருந்துகள் மாற்றுத் திறனாளர்கள் பயணம் செய்ய கூடிய வசதிகளை கொண்டிருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
மேலும் பேருந்துகளில் மாற்றுத் திறனாளர்களை ஏற்றி இறக்குவதால் அதிக கால வியரத்தை ஏற்படும். அன்றாட வேளைகளில் இது சாத்தியமற்றதாகும் என வழக்கு தொடரப்பட்டது. இதனால் புதிய பேருந்துகள் வாங்க தடை விதிக்கப்பட்டது அதனால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் அனைத்து பேருந்துகளும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.