ஏப்ரல் 5 வரை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மருத்துவர்களுக்கு விடுமுறை இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா எதிரொலி:
கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. அரசும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கி தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
தமிழகம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா மாநிலங்களில் குறிப்பாக கொரோனா தாக்கம் வேகமெடுத்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரவு ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தே வேலை – 29 சதவீத ஊழியர்கள் விருப்பம்!!
கடந்த 24 மணி நேரத்தில் 107 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் 1,555 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.