![பிக் பாஸ் சீசன் 5 பிக் பாஸ் சீசன் 5| பிரபல பிக் பாஸ் போட்டியாளர் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியவரா? - வெளியான அதிர்ச்சி தகவல்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/பிக்-பாஸ்-சீசன்-5-1.jpg)
பிக் பாஸ் சீசன் 5| பிரபல பிக் பாஸ் போட்டியாளர் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியவரா? – வெளியான அதிர்ச்சி தகவல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதில் உள்ள ஒரு பிரபல போட்டியாளர் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியவர் என்றும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்:
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஐபிஎல், சர்வைவர் என்று பலத்த போட்டி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏனென்றால் ஆரம்பித்தது முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சுவாரஸ்யமாக நிகழ்ச்சி இருக்கும். எப்போதும் பல போட்டியாளர்கள் நன்கு அறிந்தவர்களாகவும், ஒரு சிலர் அறிமுகம் அற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை பல போட்டியாளர்கள் புது முகமாக உள்ளனர்.
தேனியில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
பிரபஞ்ச அழகியாக கடந்த 2019ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அக்ஷரா போட்டியில் ஆரம்பத்தில் இருந்து கவனம் பெற்று வருகிறார். மிகவும் அமைதியாக இருப்பதாகவும், மற்றவர்களுடன் பேசுவதை தவிர்ப்பதாக்வும் மற்றவர்கள் இவரை குறை கூறினார்கள். ஆனால் தான் அப்படி இல்லை என்று அக்ஷ்ரா கூறினார். இவர் தனது வாழ்க்கையை பற்றி கூறும் போது தனது அப்பா மற்றும் அண்ணனை பற்றி கூறினார். அக்ஷரா கதை கூறி முடித்த பின் ப்ரியங்கா அதனை விமர்சித்து வந்தார்.
Jio, Airtel மற்றும் Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஆனால் இவரது கதையை முழுவதுமாக கூறவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஏனென்றால் அக்ஷ்ரா தான் கேரளா தங்க கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட ஸ்ராவ்யா சுதாகர் என்று கூறப்படுகிறது. மேலும், தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் ஸ்ராவ்யா சுதாகர் என்ற பெயரில் பங்கேற்றதாகவும் தெரிகிறது. ஆனால் இதில் எந்த விஷயத்தை பற்றியும் அக்ஷரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.