விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டின் 4வது வார நாமினேஷன் ப்ராசஸ் – காத்திருந்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் நான்காவது வாரம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மூன்றாவது வாரத்தில் அபிஷேக் வெளியேறிய நிலையில், தற்போது நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் நாமினேட் செய்பவரின் புகைப்படத்தை தீயில் போட்டு எரிக்க வேண்டும். அதில் பாவனி, இசைவாணி, அபிநய், இமான், வருண் மற்றும் பிரியங்கா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். இந்நிலையில் அரிய நாணயம் வைத்திருக்கும் போட்டியாளர்கள் விருப்பமுள்ளவர்களை காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கண்ணன், பிரசாந்துடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – ரசிகர்கள் உற்சாகம்!
யாரும் எதிர்பாராத அந்த ட்விஸ்ட் பற்றி சொன்னதும் போட்டியாளர்கள் மற்றவர்களை காப்பாற்றி வருகின்றனர். மேலும் அதன்படி நாமினேஷனில் இருந்து காயினை பயன்படுத்தி அவர்களை காப்பாற்றி கொண்டு அதற்கு பதிலாக வேறு ஒருவரை நாமினேஷன் லிஸ்ட்டில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சூப்பர் பவரை பயன்படுத்தி யாரெல்லாம் தப்பித்து இருக்கிறார்கள் என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? வைரலாகும் தகவல்!!
மேலும் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியும் நடைபெற இருக்கிறது. அதில் இந்த வார தலைவர் யாராக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அபிஷேக் வெளியேறியதால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்தது போல ரசிகர்கள் எண்ணுகின்றனர். இனிமேல் போட்டி சூடுபிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த வாரத்தில் மற்ற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தெரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.