கதிருக்கு தங்க மோதிரம் போட்டு அழகு பார்க்கும் மாமியார் – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிர் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வில் பாஸ் ஆனதால் அவருக்கு முல்லையின் அப்பா மற்றும் அம்மா இருவரும் தங்க மோதிரம் ஒன்றினை பரிசாக அளித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் விஜய் தொலைக்காட்சியில் 4 மணிக்கு கதிர் அளித்த பேட்டி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் டிவி முன்பு அமர்ந்து இருக்கின்றனர். அப்போது என்று கரண்ட் கட் ஆகி விடுகிறது. இதனால் அனைவரும் கவலை அடைந்து விடுகின்றனர். பின், சரியாக 4 மணிக்கு கரண்ட் வந்து விடுகிறது. பின், கதிர் அளித்த பேட்டி ஒளிபரப்பாகிறது. அனைவரும் விசில் அடித்து நிகழ்ச்சியினை பார்க்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் – WHO தலைமை விஞ்ஞானி!
பேட்டியில் கதிரை மிகவும் பெருமையாக பேசுகின்றனர். அது மட்டும் அல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பற்றியும் பெருமையாக பேசுகின்றனர். இதனால் மூர்த்தி மற்றும் தனத்திற்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. பின், முல்லையின் அப்பா மற்றும் அம்மா இருவரும் பேட்டியை பார்க்கின்றனர். அவர்களுக்கு தங்கள்து மாப்பிளை நல்ல மதிப்பெண் எடுத்து பேட்டி அளித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இதனை அடுத்து இருவரும் தங்களது வீட்டில் இருக்கும் தங்க மோதிரம் ஒன்றினை எடுத்துக் கொண்டு மூர்த்தியின் வீட்டிற்கு கிளம்புகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கதிர் நல்ல மதிப்பெண் எடுத்ததற்கு அவரை வாழ்த்தி விட்டு அவருக்கு தங்கள் எடுத்து வந்த தங்க மோதிரத்தை போடுகின்றனர். பின், அவரை பற்றி முல்லையின் அம்மா பெருமையாக பேசுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி விடுகின்றனர். முல்லையின் அம்மா பார்வதி தனது தெருவாசிகள் அனைவரிடமும் தனது மருமகன் குறித்து பெருமையாக பேசுகிறார். கதிருக்கு இப்படி அனைவரும் பெருமையாக பேசுவது கூச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனை ஜீவாவிடமும் கூறுகிறார். ஜீவா அவரை ஊக்கம் அளிப்பது போல பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.