இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள் காரணமாக சில நகரங்களில் இன்று முதல் ஜூலை 14ம் தேதி வரை 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. முன்னதாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் பகுதி நேரமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. அதிலும் அத்தியாவசிய 4 சேவைகள் மட்டுமே வங்கிகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கி விட்டது.
மதுரை, கோவை மாவட்டங்களில் சுருக்கெழுத்து தேர்வு மையங்கள் – நீதிமன்றம் உத்தரவு!
இந்நிலையில், பல்வேறு பண்டிகைகளும் தொடர்ந்து வர இருப்பதால் ஜூலை 10ம் தேதியான இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களின் பட்டியலையும் ரிசர்வ் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விடுமுறை நாட்கள்:
- 10 ஜூலை – இரண்டாவது சனிக்கிழமை
- 11 ஜூலை – ஞாயிறு
- 12 ஜூலை – திங்கள் (ரத யாத்திரை)
- ரத யாத்திரை காரணமாக புவனேஷ்வர் மற்றும் இம்பாலில் ஜூலை 12ம் தேதி வங்கிகள் மூடப்படும்.
- 13 ஜூலை – செவ்வாய் (பானு ஜெயந்தி)
- 14 ஜூலை – புதன் (ட்ருக்பா செச்சி)