பாக்கியாவிற்கு பண உதவி செய்யும் கோபியின் அப்பா, அதிலும் சிக்கல் – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணம் திருடு போய் இருக்கிறது. வேலை செய்தவர்கள் பணம் கேட்டு வந்து நிற்க, கோபி கோபப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், பெரிய சமையல் ஆர்டரை செய்து முடித்து 3 லட்சம் பணம் வாங்குகிறார். ஆனால் பண மோசடி செய்யும் கும்பலிடம் அந்த பணத்தை பறிகொடுக்கிறார். பின் பணம் கேட்டு அனைவரும் வந்து நிற்க இரண்டு நாட்களில் பணம் கொடுத்துவிடுவேன் என சொல்லி எழில் அனுப்புகிறார். பின் பண மோசடி செய்தவரை தேடி அலைகிறார். இதற்கிடையே மளிகை கடைக்காரர், சமையல் பாத்திரம் கொடுத்தவர் என அனைவரும் வந்து சண்டை போடுகின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் பிரபலங்கள்!
கோபியும், நாளை வீட்டு வாசலில் யாரவது வந்து நின்றால் உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என சொல்கிறார். இந்நிலையில் நாளைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாக்கியாவிற்கு வேலை செய்தவர்கள் பணம் கேட்டு வீட்டு வாசலில் வந்து நிற்கின்றனர். அப்போது பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். வந்தவர்கள் வாசலில் நின்று சத்தம் போட கோபி கோபப்படுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – கதிருக்கு எதிராக பேசும் மல்லி, சண்டையிடும் முல்லை!
பின் கோபியின் அப்பா பணம் தான வேணும் நான் தருகிறேன் என சொல்லி, பாக்கியாவை பேங்க் அழைத்து செல்கிறார். அப்போது அங்கே வேலை செய்பவர் இந்த காசை இங்கே எடுக்க முடியாது உங்களது ஊருக்கு தான் செல்ல வேண்டும் என சொல்கிறார். அதை கேட்டதும் பாக்கியாவிற்கு இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. உடனே இருவரும் என்ன செய்வது என தெரியாமல் வீட்டிற்கு வருகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.