ராதிகாவிற்காக பாக்கியாவை பிரிய முடிவு செய்த கோபி – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியையும் அவரது மனைவியையும் திருமண நிகழ்ச்சியில் ராதிகா பார்த்து விடுகிறார். பின் கோபி வீட்டிற்கு வர அவரிடம் பேசாமல் இருக்கிறார். அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபியும் பாக்கியாவும் சொந்தக்காரர் திருமண நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். அவர் ராதிகா அலுவலகத்தில் வேலை செய்பவர் என்பதால் ராதிகாவும் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அப்போது தனது மனைவியுடன் கோபி சந்தோசமாக இருப்பதை பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைகிறார். எதுவும் பேச முடியாமல் அவர் அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார்.
பின் கோபி வீட்டிற்கு வர ராதிகா கோபியிடம் பேசாமல் தவிர்க்கிறார். கோபி என்ன நடந்தது என ராதிகாவை தொட வர வேண்டாம் கோபி என ராதிகா தடுக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கோபியிடம் ராதிகா நான் உங்களது மனைவியுடன் திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன் என சொல்கிறார். நீங்க ஏன் உங்க மனைவியுடன் சந்தோசமாக இல்லை என என்னிடம் பொய் சொன்னீங்க என ராதிகா கேட்கிறார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து செய்யும் காரியம் – வைரலாகும் வீடியோ!
கோபி என்ன செய்வது என தெரியாமல் இருக்க, மற்றொரு ப்ரோமோவில் ராதிகாவிடம் நான் பொய் சொல்லவில்லை உண்மையாகவே என் மனைவியை பிடிக்காமல் தான் இருக்கிறேன் என கோபி அழுகிறார். நீ தான் எனக்கு முக்கியம் என கோபி சொல்கிறார். பின் தனது நண்பரிடம் ராதிகாவிற்காக பாக்கியாவை பிரிய முடிவு செய்துள்ளதாக சொல்ல, அவர் நண்பர் நீ என்ன பைத்தியமா? என கேட்கிறார். எனக்கு ராதிகா தான் முக்கியம் என கோபி முடிவோடு இருக்கிறார்.