![பசங்க மீது பாசமாக இருக்கும் கோபி, நம்பிக்கை இல்லாமல் பசங்க மீது பாசமாக இருக்கும் கோபி, நம்பிக்கை இல்லாமல் பேசும் ராதிகா - இன்றைய](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/01/பசங்க-மீது-பாசமாக-இருக்கும்-கோபி-நம்பிக்கை-இல்லாமல்.jpg)
பசங்க மீது பாசமாக இருக்கும் கோபி, நம்பிக்கை இல்லாமல் பேசும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எல்லா பிரச்சனைகளும் முடிந்து இனியா ஸ்கூலிற்கு கிளம்ப கோபி நான் கொண்டு சென்றுவிடுகிறேன் என சொல்கிறார். பின் ராதிகா அம்மா சீக்கிரம் விவாகரத்து செய்ய வேண்டும் என கோபியிடம் சொல்ல, ராதிகாவும் கோபி மீது நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா செல்வியிடம் என்னை அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் என் குழந்தைகளுக்கு அவர் நல்ல அப்பா அதுவே எனக்கு போதும் என சொல்ல, ஆமாம் அக்கா நீங்க சொல்வது சரி தான் என சொல்கிறார். பின் செல்வி கிளம்ப நான் டிராப் செய்யவா என எழில் கேட்கிறார். அதெல்லாம் வேண்டாம் என செல்வி கிளம்புகிறார். அப்போது பாக்கியா பழங்கள் சாப்பிட கொண்டு வர கோபி வேலை செய்பவரிடம் கொஞ்சம் தூரமாக இரு என சொல்கிறார்.
நைட்டி போடும் மீனா, பதட்டத்தில் ஜீவா, கலாய்த்த கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
அப்போது பாக்கியா நாளைக்கு ஸ்கூலிற்கு செல்ல வேண்டும் சீக்கரம் தூங்கு என சொல்கிறார். இனியா நாளைக்கு ஸ்கூலிற்கு போனால் திட்டுவார்களா என கேட்க, யாரும் உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க நீ தனியாக இருந்தால் தான் பயப்பட வேண்டும் உனக்கு நாங்க இருக்கோம் என சொல்கிறார். அப்போது இனியாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. மறுநாள் இனியா ஸ்கூலிற்கு கிளம்ப பாக்கியா நான் கொண்டு சென்று விடுகிறேன் என சொல்கிறார். அப்போது எழில் நான் அவளை விடுவதற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறேன் என சொல்கிறார்.
மறுபக்கம் ராமமூர்த்தி நான் கொண்டு சென்று விடுகிறேன் என சொல்ல, கோபி நான் இனியாவை வீட்டில் விட்டு அப்பறம் ஆபிஸ் போறேன் என சொல்கிறார். ஈஸ்வரி சாமி கும்பிட்டு வழி அனுப்பி வைக்க, கோபி இனியாவிடம் உன்னை தான் எனக்கு பிடிக்கும் உனக்காக தான் நான் இந்த வீட்டிற்கு வருகிறேன் உனக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் ஓடி வந்துருவேன் என சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா வேலை எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்க்க அங்கே லட்டு சரியாக செய்யாமல் இருக்கிறார்கள்.
சாமியாரின் அறிவுரைப்படி நடந்த பாரதி, குழப்பத்தில் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
இன்னும் அரை மணி நேரத்தில் லட்டு வாங்க வந்துருவாங்க என்ன செய்வது என தெரியாமல் பாக்கியா இருக்க, செல்வி கிழே தான் போட வேண்டும் என சொல்கிறார். எவ்வளவு சர்க்கரை போட்டிருக்கோம் தெரியுமா என கேட்க, என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். ராதிகா வீட்டில் கோபி இருக்க, ராதிகா விவாகரத்து பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். கோபி சீக்கரம் விவாகரத்து கிடைத்துவிடும் என சந்தோசமாக இருக்க, நீங்க எப்போது விவாகரத்து வாங்க இருக்கீங்க என ராதிகாவின் அம்மா கேட்கிறார்.
கோபி தடுமாறிக் கொண்டே பண்ணிரலாம் என சொல்ல, உங்களுக்கு தான் உங்க குடும்பத்தை பிடிக்காமல் இருக்கிறது. எப்போதும் இங்கே தான் இருக்கீங்க அதனால் சீக்கரம் விவாகரத்து வாங்க வேண்டியது தான என கேட்கிறார். ஆமாம் பண்ண வேண்டும் என கோபி சொல்ல, சீக்கிரமாக எல்லாத்தையும் முடிங்க என ராதிகாவின் அம்மா சொல்கிறார். கோபி ராதிகாவிடம் அம்மா ரொம்ப அவசரப்படுகிறார்கள் என கேட்க, அம்மா நான் ஏமாந்துவிட கூடாது என நினைக்கிறார்.
எனக்கே உங்க மீது சந்தேகம் வருகிறது என ராதிகா சொல்கிறார். முறைப்படி கல்யாணம் நடக்க வேண்டும் அதற்கு என் குடும்பத்தை விட்டு வர வேண்டும். ஆனால் என் மீது நம்பிக்கை இல்லை என சொல்வது சரி இல்லை என கோபி சொல்கிறார். நீங்க இருவரும் எனக்கு முக்கியம் என சொல்ல அப்போ சீக்கரம் விவாகரத்து செய்ங்க என ராதிகா சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா லட்டு செய்ய முடியாமல் இருக்க, ஆர்டர் கொடுத்தவர் வந்து லைட்டை கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்