சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி – பிரதமரிடம் அறிக்கை!!

0
சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி - பிரதமரிடம் அறிக்கை!!
சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி - பிரதமரிடம் அறிக்கை!!
சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி – பிரதமரிடம் அறிக்கை!!

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையமாக மாற உள்ளதாக உத்தரபிரதேசம் அரசு பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்த அயோத்தி வளர்ச்சி திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுற்றுலா மையம்:

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், அயோத்தி மாநகராட்சியும் உள்ளது. இந்நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராம ஜென்மபூமியுமான அயோத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலை எழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.

நீட் தேர்வு வினாத்தாள் அதிரடி மாற்றம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

இந்நிலையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது அங்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பிரதமர் மோடியிடம் உத்தர பிரதேச அரசு அயோத்தி வளர்ச்சி திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.

அதில், குறிப்பிட்டுள்ளவை,

  • அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை முதல் அயோத்தியில் ஓடும் சரயு நதியில் படகு சவாரியை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • அயோத்தியில் அரசு – தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில் ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவுப்படுத்தும் வகையில் ‘ராமாயண் வனம்’ உருவாக்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • டில்லி சாணக்யா புரியில் உள்ளது போல 1,200 ஏக்கரில் ‘வேதிக்’ நகரம் அமைக்கப்பட உள்ளது. அங்கு மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன
  • அயோத்தியில் தினமும் இரண்டு லட்சம் பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதியாக உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
  • மேலும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது அயோத்தி முற்றிலுமாக மாறி இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!