பண்டிகையை முன்னிட்டு உயர்த்தப்பட்ட ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் – ஒரு மாதம் அமல்!
துர்கா பூஜை விழாக்களை முன்னிட்டு கொல்கத்தா நகரத்தில் ஆட்டோக்கள் மற்றும் ரிக்ஷாக்களின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டிகை காலம்:
நடப்பு மாதம் நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி ஆட்டோ மற்றும் ரிக்ஷா நடத்துனர்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இந்த கட்டண உயர்வானது ஒரு மாதம் வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும், துர்கா பூஜைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஆட்டோக்கள் மற்றும் ரிக்ஷாக்களை இயக்குவதற்கான அனுமதி மறுக்கப்படும். திருவிழா முடியும் வரை ஆட்டோ ஓட்ட அனுமதி இல்லை. இதன் காரணமாக ஆட்டோ மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்களின் வாழ்வாதம் பாதிக்கப்படுகிறது. இவற்றை சமாளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தற்போது ஒரு மாத காலத்திற்கு ரிக்ஷா மற்றும் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆட்டோ டிரைவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் வந்த அதிரடி மாற்றம் – இனி ஈஸியா பொருட்கள் வாங்கலாம்!
அதன்படி வழித்தடங்களுக்கு ஏற்ப ரூபாய் 5 முதல் ரூபாய் 10 வரை ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஸ்பிஹாரி அவென்யூ முதல் பெஹலா மற்றும் பெஹலா தரதாலா முதல் பகலா மற்றும் பிரின்ஸ் அன்வர்ஷா ரோடு ஜாதகப்பூர் போன்ற முக்கிய வழித்தடங்களில் இந்த விலை உயர்வானது அமலுக்கு வந்துள்ளது.