வாட்ஸ்ஆப்பில் விடைத்தாள்களை திருத்த புதிய செயலிகள் – கல்வித்துறை அறிமுகம்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தி அதனை வாட்ஸ்அப் வழியாக விடைத்தாள்களை திருத்த கல்வித்துறை புதிதாக புதிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகத்தில் கொரோனா பரவலின் எதிரொலியாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதே போல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மட்டுமே தற்போது வரை முடிந்துள்ளது. இப்படியாக இருக்க, மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக இன்று முதல் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.
தமிழகத்தில் செவிலியர் & மருத்துவர் காலிப்பணியிடங்கள் – மே 19 நேர்காணல்!!
அதே போல் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமாக விடைத்தாள்களை திருத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வாட்ஸ்அப் வாயிலாக தேர்வு தாள்களை திருத்துவதில் பல பிரச்சனைகள் இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இதனால் தற்போது புதிதாக 2 செயலிகள் “wps office” மற்றும் “XODO” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலமாக மாணவர்கள் அனுப்பும் விடைத்தாள்களை சுலமபமாக ஆசிரியர்கள் திருத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு திருத்தும் பணிகளை எளிமைப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆசிரியர்களும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.