10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் – மாநில முதல்வர் அறிவுறுத்தல்!!
ஆந்திரா மாநிலத்தில் பொதுத்தேர்வுகள் முன்னதாக திட்டமிட்டபடியே நடத்தப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி கல்வித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்புகள்:
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையாக நாட்டின் முக்கிய கல்வி வாரியங்கள் அனைத்தும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்து, தள்ளிவைத்தும் வருகின்றது. பல மாநில அரசுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி தொடர்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
முழு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 26க்கு பிறகும் நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!!
ஆந்திரா மாநிலம்:
ஆந்திரா மாநிலத்திலும் கோவிட் வழக்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசிடம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதற்கு அல்லது தள்ளி வைப்பதற்கு கோரிக்கை வைக்கின்றது.
தேர்வுகள்:
ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அனைத்தும் முன்னதாக திட்டமிட்டபடியே, அனைத்து கோவிட் – 19 நெறிமுறைகளையும் பின்பற்றி நடைபெறும். மேலும் அனைத்து பட்ட படிப்பு மற்றும் பொறியியல் தேர்வுகளும் அட்டவணை படியே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்