விலங்குகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை – மாநில அரசின் புதிய திட்டம்!!
கோவா மாநிலத்தில் கால்நடைகளுக்காக 24×7 ஆம்புலன்ஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆம்புலன்ஸ் சேவை:
மனிதனின் அவசர மருத்துவ தேவைகளுக்காக தனியார் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் சேவைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கோவா அரசு கால்நடைகளுக்காகவும் புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாநிலத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, விலங்குகளின் உற்பத்தி திறன் மற்றும் நலனை மேம்படுத்துவதற்காக 24×7 விலங்குகள் ஆம்புலன்ஸ் திட்டம் இயங்கும் என மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
தொழில்களுக்கான வங்கி கடன் குறைய வாய்ப்பு – RBI ஷாக் தகவல்!
மற்ற அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளை போலவே கால்நடை பராமரிக்கும் மற்றும் சேவைகள் துறையானது வீட்டு வாசலில் வந்து அதற்கான சேவைகளை வழங்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சேவைகளுக்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆம்புலன்ஸ் சேவைகள் மூலமாக கால்நடைகள் மற்றும் அடிப்பட்ட தெரு நாய்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகள் மூலமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் விலங்குகளுக்கு ஏற்ப அதற்கான கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.