மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – அனுமதி வழங்கியது தமிழக அரசு!

0
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - அனுமதி வழங்கியது தமிழக அரசு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை :

கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்பின் 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. தோப்பூரில் 224.24 ஏக்கரில் கட்டப்படும் இந்த மருத்துவமனைக்கு ரூபாய் 1246 கோடி செலவழிக்க திட்டமிடப்பட்டது. நீண்ட நாட்களாக கட்டிடம் கட்ட தொடங்காமல் இருந்தது குறித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

TNPSC குரூப் 4 கணிதம் – முந்தைய ஆண்டு முக்கிய வினாக்கள்!!

இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கடந்த மே 2ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் விண்ணப்பித்தது. அதனை ஆய்வு செய்த வல்லுநர் குழு சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அனுமதி தரலாம் என்று கடந்த மே 10ஆம் தேதி அறிவித்தது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஆனது சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!