தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு!
தமிழகத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து கல்வி இயக்குனர் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரிகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளன.
SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – OTP மோசடி!
2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை வெளியிட்டுள்ளார். அதில், பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 27 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் மேற்கண்ட கல்லூரிகளில் முதலாமாண்டு இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கை பணியினை அரசு கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2021-22 ஆம் கல்வியாண்டில் TNGASA வாயிலாக நடைபெற உள்ள விண்ணப்பித்தல் மற்றும் சேர்க்கை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.