விஜய் டிவியில் மீண்டும் களமிறங்கும் நடிகை ஆனந்தி – வெளியான படப்பிடிப்பு புகைப்படம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6ல் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஆனந்தி, தற்போது ‘ராஜ பார்வை’ சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகை
இந்த வருடத்தில் புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் விஜய் டிவி சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக ‘ராஜ பார்வை’ சீரியல் அமைந்துள்ளது. பார்வையை இழந்த நாயகனை, கரம் பிடித்த கதாநாயகி நாயகனின் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவரை எப்படி பாதுகாக்கிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒரிஜினலாக பெங்காலி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ராஜ பார்வை’ சீரியல் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் செப்.19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அந்த வகையில் தமிழில் ஒளிபரப்பாகும் ‘ராஜ பார்வை’ தொடரில் பிரபல கன்னட சீரியல் நடிகர்களான முனாஃப் ரஹ்மான் மற்றும் ராஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில், நடிகை ராஷ்மி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரீட்சயமானவர். இந்த ‘ராஜ பார்வை’ தொடரில் தற்போது புதுமுகம் ஒருவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவான ஜோடி நம்பர் 1 சீசன் 6ல் கலந்து கொண்ட நடிகை ஆனந்தி, ‘ராஜ பார்வை’ சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
‘மீண்டும் லாட்டரி விற்பனை’ – மாநில முதல்வர் அனுமதி!
திருமணமாகி கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையை விட்டு விலகி இருந்த நடிகை ஆனந்தியை கண்டுகொண்ட விஜய் டிவி, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியின் மூலம் அவரை மீண்டுமாக கேமராவுக்குள் கொண்டு வந்தது. தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆனந்தி, ‘ராஜ பார்வை’ சீரியல் மூலம் அவரது ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். அந்த வகையில் ‘ராஜ பார்வை’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் மற்ற நடிகர், நடிகைகளுடன் ஆனந்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகியுள்ளது.