குணசேகரனை போலீசில் மாட்டி விட்ட ஆதிரை – எதிர்நீச்சல் சீரியல் அதிரடி சம்பவங்கள்!
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பரபரப்பாக சென்று வருகிறது. இதில், மேலும் அதிக விறுவிறுப்பாக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்க உள்ளது.
எதிர்நீச்சல்:
மிகவும் ஆணாதிக்க குணம் கொண்ட குணசேகரன் ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்காக புடவை, நகை போன்றவற்றை வாங்க குடும்பத்தினரை அழைத்து செல்கிறார். யாருக்கும் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், வேறு வழியில்லாமல் குணசேகரன் சொன்னதை செய்கின்றனர்.
பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் – 7.5 % வட்டி விகிதம்.. முழு விவரம் உள்ளே!
ஆதிரை அருணுடன் மட்டுமே தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருக்கிறார். ஜனனி ஆதிரைக்காக அருணுடன் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார். ஆனால் அருண் குடும்பத்தினர் இந்த திருமணம் நடக்க கூடாது என்று பிடிவாதமாக இருக்கின்றனர். இந்தப்பக்கம் கரிகாலன், ஆதிரை திருமண நாள் வருகிறது. தாலிகட்டும் சமயத்தில் சரியாக போலீஸ் வந்து குணசேகரனை கைது செய்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
என்னை எதுக்கு புடிக்கிறீங்க, நான் என்ன பண்ணேன் என்று குணசேகரன் கேட்க, கட்டாய கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்யிறீங்க, ஆதிரை மேஜர் பொண்ணு, அவரது சம்மதத்துடன் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, சொல்லி அவரை கைது செய்கிறார்கள். யார் புகார் அளித்தது என்று கேட்க, ஆதிரை நான் தான் போலீஸ் compliant கொடுத்தேன் என்று சொல்லுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
Exams Daily Mobile App Download