தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் மே மாத வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்த அறிவிப்பினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தங்கம் வாங்க போறீங்களா? அப்போ இன்றைய விலையை தெரிஞ்சுட்டு போங்க!
இன்றும் நாளையும் (ஜூன் 14, 15) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூன் 14 முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.