இந்தியாவில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான மாதிரி வாக்குப்பதிவின் போது முறைகேடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
மாதிரி வாக்குப்பதிவு
நாடு முழுவதும் நாளை முதல் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது ஒருமுறை தாமரை சின்னத்தை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவாகி இருப்பதாக எதிர்க்கட்சியினர் தகவல் தெரிவித்தனர். அதாவது காசர்கோடு மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் நோட்டாவை சேர்த்து மொத்தம் 10 சின்னங்கள் இருந்தது.
SBI Card நிறுவனத்தில் புதிய வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
அதில் 20 இயந்திரங்களில் உள்ள 10 சின்னங்களையும் அழுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்பின் விவிபேட் சீட்டை எடுத்துப் பார்த்தால் பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் விழுந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே இல்லை. இது பொய்யான செய்தி எனவும் மாதிரி ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதலாக ஓட்டு விழுந்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என உறுதி அளித்துள்ளது.