இந்திய ரிசர்வ் வங்கியானது யுபிஐ நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. மேலும், ஆர்பிஐ அறிவுறுத்தல்களை யுபிஐ நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
RBI அறிவுறுத்தல்கள்:
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது விற்பனை புள்ளியின் சேவையை வழங்கும் வங்கிகள் அல்லாத ரேசர் PAY , அமேசான் PAY , CASH PAY போன்ற வங்கிகள் அல்லாத நிறுவனங்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூபாய் 15 கோடிக்கு குறைவாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக ரிசர்வ் வங்கியில் இதற்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ தளங்களில் பணம் செலுத்தும் போது அதன் விற்பனை புள்ளி பரிவர்த்தனையின் போது வாடிக்கையாளர்கள் தரவுகள் சேமிக்கப்படாது.
அவ்வாறு தரவுகள் சேமிக்கப்பட்டால் அவை அழிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறுவதற்கு மார்ச் 31, 2028க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது யுபிஐ தளங்களின் நிகர பட்ச மதிப்புரூ. 25 கோடியாக குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இதை நிறுவனம் எல்லா நேரங்களிலும் பராமரிக்க வேண்டும். இதுபோல மேலும் சில அறிவுறுத்தல்கள் யுபிஐ தளங்களுக்கு ஆர்பிஐ மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.