2024 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
2024 ஆம் ஆண்டுக்கான மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆனது புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள்:
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் மிகவும் உலகப் புகழ் பெற்ற போட்டிகள் ஆகும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டு அதன்படி போட்டிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜன.1லிருந்து பெரிய சிக்கல்!! உடனே இதை பண்ணுங்க!!
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி மதத்தை புகுத்த வேண்டாம் என்றும் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.