அக்.16 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது – பொதுமக்கள் கவனத்திற்கு!
கேரளா மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அக்.16 ஆம் தேதி ரேஷன் கடை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை:
இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா என்கிற திட்டத்தின் மூலமாக பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் கிட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, மாநில ரேஷன் கடை ஊழியர்களுக்கு 11 மாத கிட் வழங்கல் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது, 11 மாத கிட் வழங்கல் நிலுவைத் தொகை வழங்குதல், ஊதிய தொகுப்பை சீரமைத்தல், பழுதடைந்த இ-பிஓஎஸ் இயந்திரத்தை முழுமையாக சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்க போகுது – வானிலை மையம் தகவல்!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் அக்டோபர் 16ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் டீலர்கள் சங்கத் தலைவர் தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.