தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுமா? – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!
தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கலந்து தேர்வு நடந்து வருகிறது. காலாண்டு தேர்வின் விடுமுறை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
காலாண்டு விடுமுறை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றது. தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் விடுமுறை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்பருவ தேர்வுகளை முடித்து விட்டு வழக்கமாக 9 அல்லது 10 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இம்முறை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் பலரும் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா செல்ல நினைத்து திட்டமிடுவது வழக்கம். இதனால் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நாட்களை நீடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அரசு இதனை ஏற்று விடுமுறை நீட்டிப்பு அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.