![தமிழக வருவாய் துறைக்கான சூப்பர் அறிவிப்புகள்..ரூ.12.50 கோடியில் TN -SMART செயலி - அமைச்சர் வெளியீடு! தமிழக வருவாய் துறைக்கான சூப்பர் அறிவிப்புகள்..ரூ.12.50 கோடியில் TN -SMART செயலி - அமைச்சர் வெளியீடு!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/04/தமிழக-வருவாய்-துறைக்கான-சூப்பர்-அறிவிப்புகள்.jpg)
தமிழக வருவாய் துறைக்கான சூப்பர் அறிவிப்புகள்..ரூ.12.50 கோடியில் TN -SMART செயலி – அமைச்சர் வெளியீடு!
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் புதிதாக 19 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் தெரிவித்துள்ளார்.
வருவாய்துறை:
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி அன்று 2023 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நடத்தப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து துறை வாரியான பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து வந்தது. இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான விவாதம் இன்று நடைபெற்றது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள் துறை சார்ந்த 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தாலுகா அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – 13,000 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் முறைகள் இதோ!
அதன்படி TN அலர்ட் கைபேசி செயலி, மேம்படுத்தப்பட்ட TN ஸ்மார்ட் செயலி 12.50 கோடி ரூபாயில் உருவாக்கப்படும் என்றும், கடலூர் மாவட்டம் கொள்ளிடம் மற்றும் இடது கரையில் ரூபாய் 14.50 கோடியில் பலப்படுத்தப்படும் என்றும், மயிலாடுதுறை திருமயிலாடி, முதலை மேடு பகுதிகளில் 16 கோடியில் பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இதே போல இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்காக புதிய செய்திகள் உருவாக்கப்படும் என்றும், நில அளவை, நில ஆவணங்கள் தொடர்பான இ-சேவைக்கு கால் சென்டர்கள் அமைக்கப்படும் என்றும், கரூர், புகழுூர் வடக்கு பகுதியில் 50 ஆண்டு காலமாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும், திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மனை வாடகை விதிக்கப்பட்டு பட்டா வழங்கப்படாதவர்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download