Home news தமிழகத்தில் உணவகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உணவகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் உணவகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உணவகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உணவகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உணவகங்கள் இயங்கும் நேரத்தை அதிகபடுத்த மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இயங்கும் நேரம் நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த உத்தரவின் படி கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்தது. மேலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அண்மையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – அரசு அறிவிப்பு!

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு போன்ற அறிவிப்புகள் வெளியானது. இந்த வகையில் இரவு ஊரடங்கு தடை, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவைகளை தொடர்ந்து, உணவகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் இயங்கும் நேரத்தை நீட்டிப்பது குறித்து மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மீண்டும் புதிய வகை வைரஸ் – தமிழகத்தில் ஊரடங்கு அமலாகுமோ? வைரலாகும் தகவல்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை ரத்து செய்ததை தொடர்ந்து, எப்எல் 2 வகை பொழுதுபோக்கு மன்றங்கள் காலை 11 முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் உணவகங்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும் உணவகங்கள் ஆகியவை காலை 1 முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்க அனுமதி மற்றும் எப்எல் 3 வகை ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here