சென்னை பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வுக்கான முடிவுகளை வெளியிட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில கூடுதல் தகவல்களை பற்றி பார்க்கலாம்.
தேர்வு முடிவு வெளியீடு
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு அனைத்து தேர்வுகளும் நேரடி முறையில் நடத்த ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இதனால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது. இதில் குறிப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் அதிகளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதன்படி இத்தேர்வில் 117 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
Post Office இல் சேமிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறந்த திட்டத்தின் முழு விபரங்கள்!
இத்தேர்வில் 1980-81 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் இந்த ஆன்லைன் தேர்வு முறை எழுத அனுமதிக்கப்பட்டார்கள். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
அதன்படி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகளை பெற விரும்பும் தேர்வர்கள் https://www.ideunom.ac.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் தகவல்களை அறிந்த சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது