இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஓமைக்ரான் எதிரொலி! மத்திய அரசு திட்டம்?
நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது. அதனால் விரைவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
மீண்டும் முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உருமாறிய கொரோனா வகையாக ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள் பரவ தொடங்கின. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய மற்றொரு கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
இந்த ஓமைக்ரான் தொற்று தற்போது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவில் மட்டும் இதுவரை 1,525 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது மஹாராஷ்டிராவில் 460 பேருக்கும், டெல்லியில் 351 பேருக்கும், குஜராத்தில் 136 பேருக்கும், தமிழகத்தில் 117 பேருக்கும், கேரளாவில் 109 பேருக்கும், ராஜஸ்தானில் 69 பேருக்கும், தெலங்கானாவில் 67 பேருக்கும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் 64 பேருக்கும், ஹரியானாவில், 63 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 20 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் ஜன.4 முதல் பொங்கல் பரிசு விநியோகம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த ஓமைக்ரான் ஒருபுறம் இருக்கையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,553 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,249 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று மட்டும் 284 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் நாடு முழுவதும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.