மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் – உயர்த்தப்பட்ட DA அமல்!
மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்கள் அனைவரும் திருத்தியமைக்கப்பட்ட அவர்களின் ஊதிய விகிதத்தில் 6வது ஊதிய கமிஷன் குழுவின் படி தொடர்ந்து ஊதியம் அகவிலைப்படியை உயர்த்தப்பட்ட விகிதத்தில் பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வு அமல்:
மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை உயர்த்தி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தவணைகளுக்கான DA உயர்வு சதவீதத்தை அறிவித்துள்ளது. இருப்பினும், DA உயர்வு அமலுக்கு வரவில்லை. இது தொடர்பான அறிவிப்புகளை ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோர்களும் அதிகம் எதிர்பார்த்து வந்தனர். தற்போது இறுதியாக உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து தற்போது 31% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.3 முதல் தினசரி வகுப்புகள் – CEO ஆலோசனை கூட்டம்!
இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்கள் முன்னதாக திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அல்லது 6வது ஊதிய கமிசன் குழுவின் படி அவர்களின் தொடர்ந்து ஊதியம் பெறுபவர்கள் அகவிலைப்படியை மேம்படுத்தப்பட்ட விகிதத்தில் பெறுவார்கள். நீதித் துறையால் வெளியிடப்பட்ட உத்தரவுகளின்படி, ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தற்போதுள்ள 189 சதவீதத்திற்கு எதிராக, அவர்களின் மாத அடிப்படை ஊதியத்தில் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் மாதாந்திர ஓய்வூதியம் 196 சதவீத திருத்தப்பட்ட விகிதத்தில் டிஏ பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பு!
ஜூலை, 2021 முதல் நவம்பர், 2021 வரையிலான கூடுதல் தவணை டிஏவின் நிலுவைத் தொகை, டிசம்பர், 2021ல் ரொக்கமாகச் செலுத்தப்பட்டு, டிசம்பர் 2021 முதல் மாதச் சம்பளத்தில் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். எவ்வாறாயினும், அரசு ஊழியர்களுக்கு முன்னதாக அதிகரிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் அல்லது 5வது ஊதியக் குழுவின் படி ஊதியத்தில் தொடர்ந்து ஊதியம் பெறுபவர்களுக்கு, தற்போதுள்ள 356 சதவீத விகிதத்தில் இருந்து 368 சதவீத அடிப்படை ஊதியத்தின் திருத்தப்பட்ட விகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும். ஜூலை, 2021 முதல் நவம்பர், 2021 வரையிலான டிஏ கூடுதல் தவணைக்கான நிலுவைத் தொகை, 2021 டிசம்பரில் பணமாக செலுத்தப்படும் மற்றும் டிசம்பர் 2021 முதல் ஊழியர்களின் மாத சம்பளம் அதிகரித்து வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.