![சரஸ்வதி மீது பழிபோடும் சந்திரலேகா, திட்டமிட்டு காப்பாற்றும் தமிழ் - இன்றைய சரஸ்வதி மீது பழிபோடும் சந்திரலேகா, திட்டமிட்டு காப்பாற்றும் தமிழ் - இன்றைய](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/11/சரஸ்வதி-மீது-பழிபோடும்-சந்திரலேகா-திட்டமிட்டு-காப்பாற்றும்-தமிழ்.jpg)
சரஸ்வதி மீது பழிபோடும் சந்திரலேகா, திட்டமிட்டு காப்பாற்றும் தமிழ் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், சந்திரலேகா சரஸ்வதி மீது பழி போடுகிறார். உடனே தமிழ் சரஸ்வதியை காப்பாற்ற திட்டமிடுகிறார்.
தமிழும் சரஸ்வதியும்:
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், சரஸ்வதி பையில் நெக்லஸ் வைத்துவிட்டு சந்திரலேகா அவள் தான் திருடியது என சொல்கிறார். கோதை அப்படி எல்லாம் சரஸ்வதி எதுவும் செய்திருக்க மாட்டாள் என சொல்ல, முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை இப்படி தான் திருமணத்திற்கு அழைப்பீர்களா என சொல்ல, சரஸ்வதி நான் எந்த தப்பும் செய்யவில்லை என சொல்கிறார். நடப்பது எல்லாம் தவறாக இருக்கிறது என தமிழும் அவரது நண்பரும் திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர்.
ஆதாரம் இருப்பது போல தமிழ் அவரது நண்பரை நடிக்க சொல்ல, அவரும் ஆதாரம் இருப்பது போல சொல்கிறார். அதை கேட்டதும் வேலைக்காரி பதட்டம் அடைய தமிழ் அவரை கவனிக்கிறார். பின் வேலைக்காரி அங்கிருந்து கிளம்ப தமிழ் அவரை பின் தொடர்ந்து சென்று என்ன நடந்தது என கேட்கிறார். அந்த வேலைக்காரி பயத்தில் உண்மையை சொல்ல, தமிழ் எல்லாம் தெரிந்து விட்டது என சொல்கிறார். கோதையை அழைத்து தமிழ் சொல்ல, கூட்டத்தை எல்லாம் தமிழ் போக சொல்கிறார்.
பின் கோதை சந்திரகலாவை அழைத்து தனியாக பேச வேண்டும் என சொல்ல, கோதை உங்களது குடும்பத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இப்படி நடந்து கொள்வது சரியா என கேள்வி கேட்கிறார். என்ன அண்ணி சரஸ்வதி யார் என நான் சொன்னேன் அல்லவா அப்பறம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்க, எதுவும் பேச முடியாமல் சரஸ்வதி இருக்கிறார். தமிழ் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கவில்லை என்றால் இவள் இவ்வளவு பெரிய பழி உடன் வெளியே சென்றிருப்பார். அப்படி சரஸ்வதி என்ன தவறு செய்தார் என கோதை கேட்கிறார்.
இவள் செய்த சின்ன சின்ன தவறுகளுக்கு இவ்வளவு பெரிய பழி போடணுமா, இதெல்லாம் உங்க பொண்ணுக்கு தெரிந்தால் உங்களது நிலைமை என்ன ஆகும் என கேட்கிறார். எனக்கு திருட்டு பொய் எல்லாம் ஆகாது இவ்வளவு பெரிய பொய் சொன்ன உங்களை நான் வெளியே அனுப்பவா என கேட்கிறார். கவலைப்படாதீங்க நான் அப்படி செய்ய மாட்டேன் என சொல்கிறார். சரஸ்வதி எங்களை போல கவுரவமானவள் என் புள்ளையும் அதுனால தான் என் காதில் சொல்லி உங்களது கவுரவத்தை காப்பாற்றினார்.
கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விடிந்தால் வசு என்னுடைய மருமகள் அவளை நல்ல அம்மாவாக இருந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என கோதை சொல்கிறார். உடனே நடந்தது எல்லாத்தையும் பார்த்து சரஸ்வதி தமிழ் சந்தோசமாக இருக்கிறார். தமிழும் சந்திரலேகாவிடம் இனிமேல் சரஸ்வதியிடம் வன்மத்துடன் இல்லாமல் உங்களது பாரம்பரியத்திற்கு ஏற்றார் போல நடந்து கொள்ள வேண்டும் என சொல்ல, கோதை சரஸ்வதியை இனிமேல் சந்தோசமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.