சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு – இன்றைய நிலவரம்!!
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.
தங்கம் விலை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் தற்போது மீண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் ஆக பெரிய வணிக வளாகங்கள், துணி, நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் அந்த கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. கடந்த ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு குறைந்தது. அதன் பின்னர் ஆவணி மாதத்தில் சற்று ஏற்றம் காணப்பட்டது.
தமிழக காவல் நிலையங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு – டிஜிபி அறிவிப்பு!
தங்கத்தின் விலை ஏற்ற தாழ்வுடன் இருந்தாலும், தங்கம் வாங்குவோர் மோகம் குறையாமல் தான் உள்ளனர். மேலும் சந்தையில் விற்கப்படும் புதுப்புது மாடல்கள் விற்பனையை சற்று அதிகரித்து உள்ளது. இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் என்பதால் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. இன்று (செப்.17) அன்று நிலவரப்படி தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு – தேர்வர்கள் ஏமாற்றம்!
சென்னையில் இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது. அதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,371க்கும், சவரன் ரூ.34,968க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். எனவே தங்க நகை வாங்க இதுவே நல்ல சான்ஸ் என அறிவுறுத்தப்படுகிறது.