நீலகிரி, ஊட்டி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றுலா தலங்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளித்து வருகிறது. செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு மிஸ்டு கால் போதும், LPG சிலிண்டர் வீடு தேடி வரும் – இந்தியன் ஆயில் சூப்பர் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சுற்றுலா தலங்களில் இயங்கும் கடைகள், உணவகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் உணவக உரிமையாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் வழிகாட்டுதல்களை சரியான முறையில் பின்பற்றுவோம் என்றும் பயணிகளின் வருகை சரிந்த சுற்றுலாத் துறையின் பொருளாதாரம் மீண்டு வர பெரிதும் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
குன்னூரில் உள்ள லேம்ஸ் பாறை மற்றும் டால்பின் நோஸ், முதுமலை புலிகள் காப்பகம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, பைகாரா நதி மற்றும் நீர்வீழ்ச்சி, ஊட்டியில் உள்ள அவலாஞ்சி, கிளன்மார்கன், ஊட்டி ராஜ்பவன், தொட்டபெட்டா, உதகை ஏரி படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் பயணிகள் வருகை அதிகம் காணப்படும். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகளுக்கு ஆட்சியர் ஜே.இன்னசென்ட் திவ்யா வலியுறுத்தியுள்ளார்.