இன்று முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 2) முதல் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது. அரசின் இந்த முடிவுகளுக்கு பெற்றோர் சங்கம் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனிடையே நோய் தொற்று பாதிப்பு குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் இன்று (ஆகஸ்ட் 2) முதல் பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சமீபத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 50% வருகையுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாநில அரசு தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக பெற்றோர் சங்கத்தினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். மேலும் பருவமழைக் காலம் குழந்தைகளிடையே வைரஸ் நோயை அதிகரிப்பதாகவும் பெற்றோர் சங்கம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், 6, 7, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக நேரடி வகுப்புகள் துவங்காது என அரசாங்கம் தெளிவுபடுத்தியது. இதையடுத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்று நாட்களில் பள்ளிக்கு வருவார்கள் எனவும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் பள்ளிக்கு வர தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மேலும் தொடரும் பட்சத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வது கட்டாயமில்லை என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.