தமிழகத்தில் 83,482 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – தொழில் திட்டங்களுக்கு முதல்வர் ஒப்பந்தம்!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில் வளர்ச்சி திட்டங்கள்:
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி, அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் அரசு புதிய தொழில் வளர்ச்சி திட்டங்களை வடிவமைத்துள்ளது. அதனை தொடர்ந்து 10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய இணை அமைச்சர் அறிவிப்பு!!
அதனை தொடர்ந்து 21,630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெற்றது. மேலும் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 5 தொழில் வளர்ச்சி திட்ட பணிகள் ஒப்பந்தமானது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ அறிமுகப்படுத்தினார். அதில் புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில் வணிகத்திற்க்கு தேவையான நூறு சேவைகள் இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்று தொழில்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.