மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி – முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்!
மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதை தொடர்ந்து முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி மதுபான விற்பனை டோர் டெலிவரிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுகள்
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைந்து வருவதால், 2 மாதங்கள் கழித்து முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பெங்களூர் உட்பட பல மாவட்டங்களில் புதிய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் ஜூன் 21 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும், அதன் பிறகு மேலும் சில கூடுதல் வழிகாட்டுதலை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு எதிரொலி – விற்பனை அதிகரிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 4.86 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. தவிர பெங்களூரில் மட்டும் 1,154 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகளின் படி,
- பார்கள் மற்றும் பப்களில் மதுபானங்கள் டோர் டெலிவரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
- தனித்து இயங்கும் மதுபான கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் ஆப்டிகல் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.
- வருவாய் துறை, வீட்டுவசதி, ஒத்துழைப்பு மற்றும் நபார்ட் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
- கொரோனா விதிகளை பின்பற்றி போக்குவரத்து அலுவலகங்கள் (RTO), தாசில்தார் தாலுகாக்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.